என் கணவருடன் ஸ்கூட்டரிலும் காரிலும் பயணிக்கும்போது நடந்த சில சம்பவங்களை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும்.அவற்றில் சில இதோ:
நாங்கள் பல வருடங்களாக இந்த காம்ப்ளெக்சில் வசிப்பதால், நிறைய குடும்பங்களுடன் பரிச்சயம் உண்டு.எப்போது வெளியே கிளம்பினாலும் யாராவது கண்ணில் பட்டு, பேச ஆரம்பித்து விடுவார்கள்.ஸ்கூட்டரில் உட்கார்ந்தபடி அவர்களுடன் பேசிவிட்டு இவர் கிளம்பி போய் விடுவார்.
பேச்சுவாக்கில், நான் பின்னாடி உட்கார காத்திருப்பதை அவர் மறந்திருப்பார்.
இது அடிக்கடி நடப்பதால், நான் அங்கேயே நிற்பேன்.சில நொடிகளில் ஞாபகம் வர, என்னை அழைத்துப்போக திரும்பி வருவார் என்று தெரியும்!
ஒரு முறை,கனத்த மழை பெய்து ஓய்ந்தவுடன்,நாங்கள் இருவரும் அலுவலகம் கிளம்பினோம்.சாலையில் முழங்கால்வரை வெள்ளம்.பின்னால் நான் உட்கார,எங்கள் வாகனம் கிளம்பியது.நடு சாலையில் இவர் ஓட்ட,இரு பக்கமும் நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பாய்ந்து,பாவம்,நடப்பவர்கள் மீது பொழிந்தது.கண்டிப்பாக சில பேர் எங்களை வசைமாரி பாடியிருப்பார்கள்!கொஞ்ச தூரம் சென்றவுடன்,ஒரு பெரிய கல்லில் மோதி, ஸ்கூட்டர் தடுமாறியது.தண்ணீரின் நடுவே கல் இருப்பதே தெரியவில்லை.நான் வழுக்கி,கீழே தொப்பென்று விழுந்துவிட்டேன்.நல்ல காலம்,உடனே சுதாரித்துக்கொண்டு நின்றுவிட்டேன்.ஆனால் இவர்பாட்டுக்கு ஒன்றும் அறியாமல் போய் விட்டிருந்தார்.நான் விழுந்ததே தெரியவில்லை.நான் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தேன். நடப்பவர்கள் கூச்சல் போட ஒருவழியாக திரும்பிப்பார்த்து அழைத்துப்போனார்.
முதல்முதலாக வாங்கிய ஸ்கூட்டர் எங்களை பாடாய் படுத்தியது.ஆறு மாதம் நன்றாக ஓடியது.பிறகு அடிக்கடி நின்றுவிடும்.குடும்பமாக போகும்போது பிரார்த்தனை செய்து கொண்டே போவேன்.எங்காவது
நடுவழியில் நின்றுவிட்டால்? அதுவும் சிக்னல் வரும்போது ஒரே டென்ஷன் தான்.திடீரென்று நின்றால் பின்னால் வரும் அத்தனை வாகன ஓட்டுனர்களும் எங்களை திட்டுவார்கள்.அதனால் நான் பின்னால் இருந்தபடியே, கணவரை சாலை ஓரமாகவே ஓட்டுமாறு எச்சரிக்கை செய்வேன்.தேவையில்லாத உபதேசம் கேட்டு அவருக்கு எரிச்சலாக வரும்.எனக்கு தெரியும் என்பார்.பலமுறை அதை தள்ளிக்கொண்டு போகும் அனுபவமும் உண்டு.தெரிந்தவர்கள் யாரும் பார்க்கக்கூடாதே என்று நினைப்பேன்.பல சமயம் சின்னப்பையன் போல் படுவேகமாக உற்சாகத்துடன் ஓட்டும்போது, நான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கோபிப்பேன்.மேடுபள்ளம் கூடப்பார்க்காமல் தாறுமாறாக ஓட்டுவார்.
பலமுறை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, திரும்பி வரும்போது ஒரே மாதிரி இருக்கும் வேறு வண்டியை நம் வண்டி என்று சாவி போட்டு கிளப்ப முயற்ச்சித்திருக்கிறார்.அதனால் நான் முன்ஜாக்கிரதையாக நம் வண்டி இருக்கும் இடத்திற்கு போய் நின்று விடுவேன்.என்ன ஒரு ஞாபகமறதி!!
ஸ்கூட்டரில்தான் இப்படி என்றால்,காரில் அதற்க்கு மேல்.கார் ஹாரன் அடிப்பது மிகவும் பிடித்த ஒன்று.அதிகமாக ஹாரன் அடிப்பவருக்கு பரிசு என்றால் இவருக்கு முதல் பரிசு நிச்சயம்.பழக்கதோஷத்தில் தேவை இல்லாதபோது கூட ஹாரன் அடிப்பார்.ஒரு வேளை noise pollutionல் தானும் ஒரு சிறு துளி பங்கேற்க்கிராரோ?சிக்னலில் பச்சை வந்துவிட்டால் இவர் வேகத்திற்கு கேட்கவே வேண்டாம்.நான் சீட்டை பிடித்துக்கொண்டு, ஒரு நிமிடம் மூச்சே நின்றது போல் ஆகி விடுவேன்.கண்டிப்பாக எதிலாவது மோதிவிடுவோம் என்று தோன்றும்.இப்படி இருக்க,சில சமயங்களில் படு ரிலாக்ஸ்டாக,கேரளநதியில் படகில் போவதுபோல் மெதுவாக ஒட்டிப்போவார் !என் அவசரத்திற்கு எரிச்சலாக இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேல்,இவர் என்னை ஷாப்பிங் அழைத்துப்போகிறேன் என்றால்,நான் மறுத்து,ஆட்டோவில் போவதை வழக்கமாகிக்கொண்டிருக்கிறேன்.காரணம்,பார்க்கிங் தேடிக்கொண்டே வெகு தூரம் போய் நிறுத்துவார்.என் வீட்டிலிருந்து நடந்தால் கூட அதை விட குறைவான தூரம்தான் இருக்கும்.கடையில் நான் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்.நடந்து போவதிலேயே நேரம் சரியாகிவிடும்.
சமீபத்தில் அமெரிக்காபோயிருந்தபோது,அந்த விசாலமான சாலைகளில் இவர் எவ்வளவு சௌகரியமாக கார் ஓட்டலாம் என்று தோன்றியது.ஆனால் கூடவே இன்னொரு எண்ணம்- அங்கு தான் இவர் ஹாரன் அடிக்கமுடியாதே!
நாங்கள் பல வருடங்களாக இந்த காம்ப்ளெக்சில் வசிப்பதால், நிறைய குடும்பங்களுடன் பரிச்சயம் உண்டு.எப்போது வெளியே கிளம்பினாலும் யாராவது கண்ணில் பட்டு, பேச ஆரம்பித்து விடுவார்கள்.ஸ்கூட்டரில் உட்கார்ந்தபடி அவர்களுடன் பேசிவிட்டு இவர் கிளம்பி போய் விடுவார்.
பேச்சுவாக்கில், நான் பின்னாடி உட்கார காத்திருப்பதை அவர் மறந்திருப்பார்.
இது அடிக்கடி நடப்பதால், நான் அங்கேயே நிற்பேன்.சில நொடிகளில் ஞாபகம் வர, என்னை அழைத்துப்போக திரும்பி வருவார் என்று தெரியும்!
ஒரு முறை,கனத்த மழை பெய்து ஓய்ந்தவுடன்,நாங்கள் இருவரும் அலுவலகம் கிளம்பினோம்.சாலையில் முழங்கால்வரை வெள்ளம்.பின்னால் நான் உட்கார,எங்கள் வாகனம் கிளம்பியது.நடு சாலையில் இவர் ஓட்ட,இரு பக்கமும் நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பாய்ந்து,பாவம்,நடப்பவர்கள் மீது பொழிந்தது.கண்டிப்பாக சில பேர் எங்களை வசைமாரி பாடியிருப்பார்கள்!கொஞ்ச தூரம் சென்றவுடன்,ஒரு பெரிய கல்லில் மோதி, ஸ்கூட்டர் தடுமாறியது.தண்ணீரின் நடுவே கல் இருப்பதே தெரியவில்லை.நான் வழுக்கி,கீழே தொப்பென்று விழுந்துவிட்டேன்.நல்ல காலம்,உடனே சுதாரித்துக்கொண்டு நின்றுவிட்டேன்.ஆனால் இவர்பாட்டுக்கு ஒன்றும் அறியாமல் போய் விட்டிருந்தார்.நான் விழுந்ததே தெரியவில்லை.நான் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தேன். நடப்பவர்கள் கூச்சல் போட ஒருவழியாக திரும்பிப்பார்த்து அழைத்துப்போனார்.
முதல்முதலாக வாங்கிய ஸ்கூட்டர் எங்களை பாடாய் படுத்தியது.ஆறு மாதம் நன்றாக ஓடியது.பிறகு அடிக்கடி நின்றுவிடும்.குடும்பமாக போகும்போது பிரார்த்தனை செய்து கொண்டே போவேன்.எங்காவது
நடுவழியில் நின்றுவிட்டால்? அதுவும் சிக்னல் வரும்போது ஒரே டென்ஷன் தான்.திடீரென்று நின்றால் பின்னால் வரும் அத்தனை வாகன ஓட்டுனர்களும் எங்களை திட்டுவார்கள்.அதனால் நான் பின்னால் இருந்தபடியே, கணவரை சாலை ஓரமாகவே ஓட்டுமாறு எச்சரிக்கை செய்வேன்.தேவையில்லாத உபதேசம் கேட்டு அவருக்கு எரிச்சலாக வரும்.எனக்கு தெரியும் என்பார்.பலமுறை அதை தள்ளிக்கொண்டு போகும் அனுபவமும் உண்டு.தெரிந்தவர்கள் யாரும் பார்க்கக்கூடாதே என்று நினைப்பேன்.பல சமயம் சின்னப்பையன் போல் படுவேகமாக உற்சாகத்துடன் ஓட்டும்போது, நான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கோபிப்பேன்.மேடுபள்ளம் கூடப்பார்க்காமல் தாறுமாறாக ஓட்டுவார்.
பலமுறை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, திரும்பி வரும்போது ஒரே மாதிரி இருக்கும் வேறு வண்டியை நம் வண்டி என்று சாவி போட்டு கிளப்ப முயற்ச்சித்திருக்கிறார்.அதனால் நான் முன்ஜாக்கிரதையாக நம் வண்டி இருக்கும் இடத்திற்கு போய் நின்று விடுவேன்.என்ன ஒரு ஞாபகமறதி!!
ஸ்கூட்டரில்தான் இப்படி என்றால்,காரில் அதற்க்கு மேல்.கார் ஹாரன் அடிப்பது மிகவும் பிடித்த ஒன்று.அதிகமாக ஹாரன் அடிப்பவருக்கு பரிசு என்றால் இவருக்கு முதல் பரிசு நிச்சயம்.பழக்கதோஷத்தில் தேவை இல்லாதபோது கூட ஹாரன் அடிப்பார்.ஒரு வேளை noise pollutionல் தானும் ஒரு சிறு துளி பங்கேற்க்கிராரோ?சிக்னலில் பச்சை வந்துவிட்டால் இவர் வேகத்திற்கு கேட்கவே வேண்டாம்.நான் சீட்டை பிடித்துக்கொண்டு, ஒரு நிமிடம் மூச்சே நின்றது போல் ஆகி விடுவேன்.கண்டிப்பாக எதிலாவது மோதிவிடுவோம் என்று தோன்றும்.இப்படி இருக்க,சில சமயங்களில் படு ரிலாக்ஸ்டாக,கேரளநதியில் படகில் போவதுபோல் மெதுவாக ஒட்டிப்போவார் !என் அவசரத்திற்கு எரிச்சலாக இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேல்,இவர் என்னை ஷாப்பிங் அழைத்துப்போகிறேன் என்றால்,நான் மறுத்து,ஆட்டோவில் போவதை வழக்கமாகிக்கொண்டிருக்கிறேன்.காரணம்,பார்க்கிங் தேடிக்கொண்டே வெகு தூரம் போய் நிறுத்துவார்.என் வீட்டிலிருந்து நடந்தால் கூட அதை விட குறைவான தூரம்தான் இருக்கும்.கடையில் நான் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்.நடந்து போவதிலேயே நேரம் சரியாகிவிடும்.
சமீபத்தில் அமெரிக்காபோயிருந்தபோது,அந்த விசாலமான சாலைகளில் இவர் எவ்வளவு சௌகரியமாக கார் ஓட்டலாம் என்று தோன்றியது.ஆனால் கூடவே இன்னொரு எண்ணம்- அங்கு தான் இவர் ஹாரன் அடிக்கமுடியாதே!