காலை 7 மணிக்கு வாக்கிங் முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது "அது "என் கண்ணில் பட்டது .இன்று எப்படியாவது இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும்,ஒரு கை பார்த்து விடலாம் என்று தீர்மானித்தேன் .துடைப்பமும் கையுமாக,இங்கேயும் அங்கேயும் பெருக்கி தேடினேன்.விளக்கு போட்டு ,நாற்காலிகளை நகர்த்தும் அரவம் கேட்டு ,என் மாமியார் தன் அறையிலிருந்து வெளியே வந்தார் .என்னை பார்த்து " இன்று லக்ஷ்மி வரமாட்டாளா ?" என்றார் (லக்ஷ்மி எங்கள் வீட்டில் வேலை செய்பவள் ). நான் பதில் அளிக்கவில்லை ."நீ அவளுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டாய் .சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்தால் எப்படி ?"
இதற்குள் நோயாளியான என் அம்மாவின் அறையில் இருந்து அவரை பார்த்துகொள்ளும் பெண் வெளியே வந்து இங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .எனக்கு எரிச்சலாக வந்தது .ஆனால் என் வேலையில் கவனமாக இருந்தேன் .உள்ளிருந்து என் அம்மா ஈனஸ்வரத்தில் "இவர்கள் எல்லோரும் அப்படித்தான் மாமி,அடிக்கடி லீவு எடுத்து விடுவார்கள் "என்று மாமியாருக்கு பதில் அளித்தார் .90 வயதான என் மாமியாருக்கு காது கேட்காவிட்டாலும், மெதுவாக அம்மா பேசுவது எப்படியோ கேட்டுவிடும் !
மாமியார் - லக்ஷ்மி வராவிட்டால் யார் என்னை குளிப்பாட்டுவார்கள் ?
அம்மா - கொஞ்ச நேரம் காத்திருங்கள் .
மாமியார் - (என்னை பார்த்து )நீ ஒன்றும் பெருக்காதே .குப்பை இருந்தால் இருக்கட்டும் .நம் வீடு ரொம்ப நீட்டாக தான் இருக்கிறது .
அம்மா - ஒரு நாள் பெருக்காவிட்டால் ஒன்றும் ஆகி விடாது
மாமியார் - போன் பண்ணி பார்க்கிறாயா ?எதற்கும் இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் .
(உங்களுக்கு குளிக்க என்ன அவசரம் என்று முணுமுணுத்தேன். )
மாமியார் நாற்காலியில் உட்கார்ந்து என்னையே பார்த்து கொண்டிருந்தார்.எனக்கு ஆத்திரமாக வந்தது .இவர்கள் என்னையே கவனித்துக்கொண்டு ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ன விஷயம் என்று தெரியாமலேயே .
திடீரென்று என் மாமியார் "எதாவது தொலைந்து விட்டதா? "என்றார் .
அம்மா- "மாத்திரை கீழே விழுந்திருக்கும் .மேஜைக்கு அடியில் உருண்டிருக்கும் .கார்த்திகா ,நீ கொஞ்சம் குனிந்து பாரு" .
அந்த பெண் குனிந்து தேட ஆரம்பித்தாள்.மாமியாரும் தன் காலடியில் தேடினார் .
எனக்கு அழுவதா ,சிரிப்பதா என்று தெரியவில்லை .ஏதோ யூகத்தில் ஆளாளுக்கு பேசிக்கொண்டே போகிறார்கள் .அக்னி நக்ஷத்திர சூட்டில்,வியர்த்து விறுவிறுத்து நான்,எரிச்சல் தாளாமல் உரத்த குரலில் சொன்னேன்,"பல்லி அம்மா,பல்லி !!நான் பல்லியை தேடிக்கொண்டிருக்கிறேன் .நாலு நாட்களாக அது என்னுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது.இன்று எப்படியாவது அதை துரத்திவிடவேண்டும் என்றால் நீங்களெல்லாம் ஏதேதோ பேசி எரிச்சல் மூட்டுகிறீர்கள்.பாருங்கள்.இந்த அமர்க்களத்தில் அது பயந்துகொண்டு மீண்டும் டிவி பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டது."
எனக்கு அழுகையே வந்து விட்டது.பல்லி என்றாலே எனக்கு அலர்ஜி.பல்லி துரத்திய அனுபவம் நிறைய உண்டு எனக்கு.ஆனால் இந்த குட்டி பல்லி என்னை இப்படி படாத பாடு படுத்துகிறதே !பார்க்கலாம் - நாளையாவது நான் வெற்றி அடையமாட்டேனா?
இதற்குள் நோயாளியான என் அம்மாவின் அறையில் இருந்து அவரை பார்த்துகொள்ளும் பெண் வெளியே வந்து இங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .எனக்கு எரிச்சலாக வந்தது .ஆனால் என் வேலையில் கவனமாக இருந்தேன் .உள்ளிருந்து என் அம்மா ஈனஸ்வரத்தில் "இவர்கள் எல்லோரும் அப்படித்தான் மாமி,அடிக்கடி லீவு எடுத்து விடுவார்கள் "என்று மாமியாருக்கு பதில் அளித்தார் .90 வயதான என் மாமியாருக்கு காது கேட்காவிட்டாலும், மெதுவாக அம்மா பேசுவது எப்படியோ கேட்டுவிடும் !
மாமியார் - லக்ஷ்மி வராவிட்டால் யார் என்னை குளிப்பாட்டுவார்கள் ?
அம்மா - கொஞ்ச நேரம் காத்திருங்கள் .
மாமியார் - (என்னை பார்த்து )நீ ஒன்றும் பெருக்காதே .குப்பை இருந்தால் இருக்கட்டும் .நம் வீடு ரொம்ப நீட்டாக தான் இருக்கிறது .
அம்மா - ஒரு நாள் பெருக்காவிட்டால் ஒன்றும் ஆகி விடாது
மாமியார் - போன் பண்ணி பார்க்கிறாயா ?எதற்கும் இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் .
(உங்களுக்கு குளிக்க என்ன அவசரம் என்று முணுமுணுத்தேன். )
மாமியார் நாற்காலியில் உட்கார்ந்து என்னையே பார்த்து கொண்டிருந்தார்.எனக்கு ஆத்திரமாக வந்தது .இவர்கள் என்னையே கவனித்துக்கொண்டு ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ன விஷயம் என்று தெரியாமலேயே .
திடீரென்று என் மாமியார் "எதாவது தொலைந்து விட்டதா? "என்றார் .
அம்மா- "மாத்திரை கீழே விழுந்திருக்கும் .மேஜைக்கு அடியில் உருண்டிருக்கும் .கார்த்திகா ,நீ கொஞ்சம் குனிந்து பாரு" .
அந்த பெண் குனிந்து தேட ஆரம்பித்தாள்.மாமியாரும் தன் காலடியில் தேடினார் .
எனக்கு அழுவதா ,சிரிப்பதா என்று தெரியவில்லை .ஏதோ யூகத்தில் ஆளாளுக்கு பேசிக்கொண்டே போகிறார்கள் .அக்னி நக்ஷத்திர சூட்டில்,வியர்த்து விறுவிறுத்து நான்,எரிச்சல் தாளாமல் உரத்த குரலில் சொன்னேன்,"பல்லி அம்மா,பல்லி !!நான் பல்லியை தேடிக்கொண்டிருக்கிறேன் .நாலு நாட்களாக அது என்னுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது.இன்று எப்படியாவது அதை துரத்திவிடவேண்டும் என்றால் நீங்களெல்லாம் ஏதேதோ பேசி எரிச்சல் மூட்டுகிறீர்கள்.பாருங்கள்.இந்த அமர்க்களத்தில் அது பயந்துகொண்டு மீண்டும் டிவி பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டது."
எனக்கு அழுகையே வந்து விட்டது.பல்லி என்றாலே எனக்கு அலர்ஜி.பல்லி துரத்திய அனுபவம் நிறைய உண்டு எனக்கு.ஆனால் இந்த குட்டி பல்லி என்னை இப்படி படாத பாடு படுத்துகிறதே !பார்க்கலாம் - நாளையாவது நான் வெற்றி அடையமாட்டேனா?