முதன் முதலாக நான் திருப்பதி போனது என் கல்யாணம் முடிந்த பிறகுதான்.அதற்கு ஆறு மாதம் முன்தான் மைத்துனரின் கல்யாணம் நடந்ததால்,இரு தம்பதிகளையும் ஒன்றாக அழைத்து போனார்கள்.மாமனார்,மாமியார்,நாங்கள்,இன்னும் சில உறவினர்கள் என ஒரு கூட்டமே கிளம்பினோம்.மருமகள்கள் இருவரும் அங்கு மாவிளக்கு போடுவதாக மாமியாரின் வேண்டுதல்.திருப்பதியில் அந்த அலைமோதும் கூட்டம் என்னை பிரமிக்க வைத்தது.அவ்வளவு ஜனங்களை நான் இதற்கு முன் எங்கும் பார்த்தது கிடையாது.
எனக்கும் என் ஓர்ப்படிக்கும் ஒரே டென்ஷன்.இருவரும் கோவிலுக்கு மடிசார் புடவை கட்டவேண்டிய நிர்பந்தம்.நாங்கள் தங்கியிருந்த காட்டேஜிலிருந்து வெகு தூரம் மேடும் பள்ளமுமாக கோவிலுக்கு நடக்க வேண்டும், அதுவும் பழக்கமே இல்லாத இந்த கோலத்தில்!ஒரு வழியாக இருவரும் பெரியவர்களின் உதவியோடு புடவை கட்டிக்கொண்டு,தசா புசாவென்று நடந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் நிறைய பேர் எங்களையே முறைத்தார்கள்.மடிசாரும்,மஞ்சள்கயிறும்தான் எங்களை புதுமணப்பெண்கள் என்று காட்டிவிட்டதே!மலையில் காற்று பிச்சுவாங்க,புடவை அங்கும் இங்கும் பறக்க ஆரம்பித்துவிட்டது.அரக்குக்கலர் பட்டுப்புடவையில் இரு தேவதைகள் பறப்பது போல் தோற்றமளித்தோம்.ஒரு கை பறக்கும் புடவையை பிடிக்க,இன்னொன்றில் பூஜை சாமான் என்று பேச்சும் சிரிப்புமாக ஒரு வழியாக கோவிலை அடைந்தோம்.
மாமியார் சொல்லிக்கொடுக்க,மாவிளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டோம்.இதனிடையில் இருவருக்கும் பெரிய பிரச்னை. பலமுறை குனிந்து நிமிர்ந்ததில்,புடவை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்து கொண்டிருந்தது.சரி செய்துகொள்ள,அங்கு மறைவான இடமும் கிடையாது.என்ன செய்ய?அப்படியே வாரிச்சுருட்டி சொருகிக்கொண்டோம்.இப்போது மீனவர்ப்பெண்களைப்போல இருந்த எங்களைப்பார்த்து எல்லோரும் சிரித்து கலாட்டா செய்தார்கள்.இறுக்கமாக சொருகிக்கொண்டிருந்ததால் ஜப்பானியப்பெண்கள் போல் அடிஅடியாக நடந்து,புதிய ஒரு ஸ்டைலில் ஒரு வழியாக எங்கள் இருப்பிடத்திற்கு சென்றோம்.பெருமாள் தரிசனம் திவ்யமாகக்கிடைத்தும்,மனதெல்லாம் அந்த புடவையில் தான் லயித்திருந்தது.
இதன் பிறகு நானும் கணவரும் பலமுறை திருப்பதிக்கு நடந்தே சென்றிருக்கிறோம்.ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசமான அனுபவம்.கடைசியாக போன பயணம் மறக்க முடியாதது.மிக சௌகரியமாக TTDC பஸ்ஸில் அதிகாலையில் புறப்பட்டு திருப்பதி போய் சேர்ந்தோம்.தரிசன வரிசை தான் வெகு நீளம்.கூட்டம் அலை மோதியது.ஆமை வேகத்தில் மெல்ல மெல்ல ஊர்ந்து,நாலு மணி நேரம் கழித்து,தூரத்தில் பெருமாள் தெரிய ஆரம்பித்தார்.கால் வலியால் மிகவும் கஷ்டப்பட்டு, வெப்பம் தாங்க முடியாமல் தவித்த நான் சந்தோஷத்தில் திளைத்தேன்.திடீரென்று ஒரு பெரிய கூட்டம் எங்கள் வரிசையில் சேர்ந்தது.கூச்சல் போட்டுக்கொண்டு,ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கொண்டும்,இடித்துக்கொண்டும் துஷ்டத்தனமாக நடந்து கொண்டார்கள்.பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டுமே என்று எல்லோருக்கும் கவலை.ஜருகண்டி பெண்கள் தங்கள் வேலையில் மும்முரமாக எல்லோரையும் பிடித்து தள்ளிக்கொண்டு இருந்தனர்.சந்நிதியின் மிக அருகில் நான் வந்தபோது,ஒரு ஜருகண்டி பெண் என்னை முரட்டுத்தனமாக பிடித்து தள்ளி விட்டாள்.என் கால் தடுக்கி ஒரு இரும்பு தடுப்பில் பட்டு, வலியால் துடித்துவிட்டேன்.ஒரே ஒரு கணம் தான். வந்ததே கோபம்! ஓங்கி ஒரு அறை விட்டேன் அந்த பெண்ணை!அதற்குள் பெருமாளின் முன் வந்துவிட்டேன்.என் செயலால் படபடக்கும் இதயத்தை பிடித்துக்கொண்டு "பெருமாளே !என்ன செய்து விட்டேன் நான்?ஒரு துரும்புக்குக்கூட கேடு நினைக்காதவள்,இந்த பெண் மேல் கை வைத்து விட்டேனே!தயவு செய்து என்னை மன்னித்து விடு" என்று மட்டும்தான் பிரார்த்தனை செய்ய முடிந்தது.அந்த பெண்ணோ ஒன்றுமே கண்டுகொள்ளவில்லை.
வெளியே இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர்.என்னையே பார்ப்பதுபோல் எனக்கு ஒரு பிரமை.என் செயலால் நான் கலங்கி பயந்துவிட்டேன்.என் கணவரோ,அவர்கள் உன்னை பிடிக்கத்தான் காத்திருக்கிறார்கள் என்று பயமுறுத்த,எனக்கு மயக்கமே வந்துவிட்டது.என் குற்ற உணர்வும் அதிர்ச்சியும் குறைய வெகு நேரம் பிடித்தது.ஆங்காங்கே wireless வைத்துக்கொண்டு போலீஸ் - பாதுகாப்பிற்காக தான் -ஆனால் எனக்கு இந்த செயலுக்காக தண்டனை கொடுக்கத்தான் என்று தோன்றியது.எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக மூன்று போலீஸ்காரர்கள் எங்கள் பஸ்ஸில் கீழ் திருப்பதியிலுருந்து சென்னை வரை பயணித்தார்கள்.இப்படியாக பயந்து பயந்து, நிம்மதி இல்லாமல் ஒரு வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.என்னை அறியாமல் நடந்த இந்த செயலை நினைத்து இன்று கூட அவமானமாக இருக்கிறது.
எனக்கும் என் ஓர்ப்படிக்கும் ஒரே டென்ஷன்.இருவரும் கோவிலுக்கு மடிசார் புடவை கட்டவேண்டிய நிர்பந்தம்.நாங்கள் தங்கியிருந்த காட்டேஜிலிருந்து வெகு தூரம் மேடும் பள்ளமுமாக கோவிலுக்கு நடக்க வேண்டும், அதுவும் பழக்கமே இல்லாத இந்த கோலத்தில்!ஒரு வழியாக இருவரும் பெரியவர்களின் உதவியோடு புடவை கட்டிக்கொண்டு,தசா புசாவென்று நடந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் நிறைய பேர் எங்களையே முறைத்தார்கள்.மடிசாரும்,மஞ்சள்கயிறும்தான் எங்களை புதுமணப்பெண்கள் என்று காட்டிவிட்டதே!மலையில் காற்று பிச்சுவாங்க,புடவை அங்கும் இங்கும் பறக்க ஆரம்பித்துவிட்டது.அரக்குக்கலர் பட்டுப்புடவையில் இரு தேவதைகள் பறப்பது போல் தோற்றமளித்தோம்.ஒரு கை பறக்கும் புடவையை பிடிக்க,இன்னொன்றில் பூஜை சாமான் என்று பேச்சும் சிரிப்புமாக ஒரு வழியாக கோவிலை அடைந்தோம்.
மாமியார் சொல்லிக்கொடுக்க,மாவிளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டோம்.இதனிடையில் இருவருக்கும் பெரிய பிரச்னை. பலமுறை குனிந்து நிமிர்ந்ததில்,புடவை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்து கொண்டிருந்தது.சரி செய்துகொள்ள,அங்கு மறைவான இடமும் கிடையாது.என்ன செய்ய?அப்படியே வாரிச்சுருட்டி சொருகிக்கொண்டோம்.இப்போது மீனவர்ப்பெண்களைப்போல இருந்த எங்களைப்பார்த்து எல்லோரும் சிரித்து கலாட்டா செய்தார்கள்.இறுக்கமாக சொருகிக்கொண்டிருந்ததால் ஜப்பானியப்பெண்கள் போல் அடிஅடியாக நடந்து,புதிய ஒரு ஸ்டைலில் ஒரு வழியாக எங்கள் இருப்பிடத்திற்கு சென்றோம்.பெருமாள் தரிசனம் திவ்யமாகக்கிடைத்தும்,மனதெல்லாம் அந்த புடவையில் தான் லயித்திருந்தது.
இதன் பிறகு நானும் கணவரும் பலமுறை திருப்பதிக்கு நடந்தே சென்றிருக்கிறோம்.ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசமான அனுபவம்.கடைசியாக போன பயணம் மறக்க முடியாதது.மிக சௌகரியமாக TTDC பஸ்ஸில் அதிகாலையில் புறப்பட்டு திருப்பதி போய் சேர்ந்தோம்.தரிசன வரிசை தான் வெகு நீளம்.கூட்டம் அலை மோதியது.ஆமை வேகத்தில் மெல்ல மெல்ல ஊர்ந்து,நாலு மணி நேரம் கழித்து,தூரத்தில் பெருமாள் தெரிய ஆரம்பித்தார்.கால் வலியால் மிகவும் கஷ்டப்பட்டு, வெப்பம் தாங்க முடியாமல் தவித்த நான் சந்தோஷத்தில் திளைத்தேன்.திடீரென்று ஒரு பெரிய கூட்டம் எங்கள் வரிசையில் சேர்ந்தது.கூச்சல் போட்டுக்கொண்டு,ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கொண்டும்,இடித்துக்கொண்டும் துஷ்டத்தனமாக நடந்து கொண்டார்கள்.பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டுமே என்று எல்லோருக்கும் கவலை.ஜருகண்டி பெண்கள் தங்கள் வேலையில் மும்முரமாக எல்லோரையும் பிடித்து தள்ளிக்கொண்டு இருந்தனர்.சந்நிதியின் மிக அருகில் நான் வந்தபோது,ஒரு ஜருகண்டி பெண் என்னை முரட்டுத்தனமாக பிடித்து தள்ளி விட்டாள்.என் கால் தடுக்கி ஒரு இரும்பு தடுப்பில் பட்டு, வலியால் துடித்துவிட்டேன்.ஒரே ஒரு கணம் தான். வந்ததே கோபம்! ஓங்கி ஒரு அறை விட்டேன் அந்த பெண்ணை!அதற்குள் பெருமாளின் முன் வந்துவிட்டேன்.என் செயலால் படபடக்கும் இதயத்தை பிடித்துக்கொண்டு "பெருமாளே !என்ன செய்து விட்டேன் நான்?ஒரு துரும்புக்குக்கூட கேடு நினைக்காதவள்,இந்த பெண் மேல் கை வைத்து விட்டேனே!தயவு செய்து என்னை மன்னித்து விடு" என்று மட்டும்தான் பிரார்த்தனை செய்ய முடிந்தது.அந்த பெண்ணோ ஒன்றுமே கண்டுகொள்ளவில்லை.
வெளியே இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர்.என்னையே பார்ப்பதுபோல் எனக்கு ஒரு பிரமை.என் செயலால் நான் கலங்கி பயந்துவிட்டேன்.என் கணவரோ,அவர்கள் உன்னை பிடிக்கத்தான் காத்திருக்கிறார்கள் என்று பயமுறுத்த,எனக்கு மயக்கமே வந்துவிட்டது.என் குற்ற உணர்வும் அதிர்ச்சியும் குறைய வெகு நேரம் பிடித்தது.ஆங்காங்கே wireless வைத்துக்கொண்டு போலீஸ் - பாதுகாப்பிற்காக தான் -ஆனால் எனக்கு இந்த செயலுக்காக தண்டனை கொடுக்கத்தான் என்று தோன்றியது.எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக மூன்று போலீஸ்காரர்கள் எங்கள் பஸ்ஸில் கீழ் திருப்பதியிலுருந்து சென்னை வரை பயணித்தார்கள்.இப்படியாக பயந்து பயந்து, நிம்மதி இல்லாமல் ஒரு வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.என்னை அறியாமல் நடந்த இந்த செயலை நினைத்து இன்று கூட அவமானமாக இருக்கிறது.